863 ஆக அதிகரித்தது கொரோனா தொற்று

5 s 2
5 s 2

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 07 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய கொரோனா தொற்றியவர்களின் மொத்த எண்ணிக்கை 856 இலிருந்து 863 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

நேற்றிரவு 11.55 மணிக்கான புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த அதிகரிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி நேற்று மட்டும் 16 பேர் கொரோனாத் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

நேற்றுப் புதிய தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களில் 14 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் எனவும், ஏனைய 02 பேரும் அண்மையில் டுபாயிலிருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.