இரு சிறுவர்களிடமிருந்து விசேட அறிக்கை

078
078

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டுவரும் நிலையில், தற்போது தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வரும் வழக்கறிஞர் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, ஆயுதப் பயிற்சி சம்பவத்துடன் தொடர்புபட்டிருப்பது தெரியவந்துள்ளது.

மதரஸா பாடசாலைகளில் பயின்று வரும் இரண்டு மாணவர்கள் இது தொடர்பி்ல் நீதிமன்றில் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

10 வயதுக்குட்பட்ட குறித்த சிறுவர்கள் இருவரும் 1 மணி நேரத்திற்கு மேலாக நீதவான் முன்னிலையில் பல்வேறு விடயங்களை தெரிவித்தனர்.

அவர்கள் கற்ற பாடசாலையில் தீவிரவாத பயிற்சி வழங்கியமை, தற்காப்பு கலை பயிற்றுவித்தமை உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அவர்கள் இதன்போது தெரிவித்துள்ளனர்.