குடும்ப பெண்ணின் தாலியை அறுத்த வழிப்பறி கொள்ளையர்கள் கைது!

IMG 20200517 WA0001
IMG 20200517 WA0001

யாழ்ப்பாணம் நவாலி பகுதியில் நேற்று மாலை குடும்ப பெண் ஒருவரின் தாலியை அறுத்த வழிப்பறி கொள்ளையர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நவாலி சின்னப்பா வீதியில் சென்றுகொண்டிருந்த இளம் குடும்பப் பெண்ணின் 11 பவுண் தாலியை நேற்று மாலை அபகரித்துச் சென்ற கொள்ளையர்கள் இருவரும் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முச்சக்கர வண்டியில் சென்ற கொள்ளையர்கள் இருவரே இந்தக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். முச்சக்கர வண்டியின் இலக்கத்தைவைத்து கொள்ளையர்கள் இருவரையும் பொலிஸார் கைது செய்தனர்.

சந்தேக நபர் ஒருவரிடமிருந்து கொள்ளையிடப்பட்ட 11 தங்கப் பவுண் தாலிக்கொடியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேக நபர்கள் பயன்படுத்திய முச்சக்கரவண்டியும் கைப்பற்றப்பட்டுள்ளது.