புதிதாக அடையாளம் காணப்பட்ட 28 பேரும் கடற்படையினர்

9 s
9 s

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுடன் இதுவரை அடையாளம் காணப்பட்ட 1020 பேரில் 578 பேர் கடற்படையினர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இன்று புதிதாக அடையாளம் காணப்பட்ட 28 பேரும் கடற்படையினர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ள கடற்படையினரில் 209 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர் எனவும், ஏனையோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் கடற்படையின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.