அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேசத்தில் கடல் சீற்றத்தின் காரணமாக 100 மீட்டர் தாண்டி ஊருக்குள் புகுந்த கடல் நீர் புகுந்துள்ள நிலையில் சம்பவ இடத்திற்கு சென்று காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் சக பிரதேச சபை உறுப்பினர்களும் பார்வையிட்டுள்ளனர்.
குறிப்பாக கடலோர வீதியை தாண்டி ஊருக்குள் கடல்நீர் இன்று முற்பகல் உட்புகுந்துள்ளது. இதனால் மீனவர்களின் வலைகள் தோணிகள் என்பன 100 மீற்றர் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டுள்ளன.