மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்படும் – 10 மாவட்டங்கள்!

.jpg
.jpg

நாட்டில் 10 மாவட்டங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நாளை வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி காலி, மாத்தளை, இரத்தினபுரி, களுத்துறை, மாத்தறை, கொழும்பு, கேகாலை ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் மக்களை மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் குருநாகல், கண்டி மற்றும் நுவரெலிய மாவட்டங்களுக்கும் இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.