கிளிநொச்சி பளையில் கோர விபத்து கணவர் பலி மனைவி படுகாயம்

8 uu
8 uu

கிளிநொச்சி பளை பகுதியில் இன்று காலை விமானப் படையின் அம்புலன்ஸ் வாகனம் மோதி குடும்பத்தலைவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில் அவரது மனைவி படுகாயமடைந்துள்ளார் .

பளை – தம்பகாமம் சந்தியில் குடும்பத் தலைவரும் அவருடைய மனைவியும் வந்து ஏறிய போது, யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி ஏ9 வீதியில் பயணித்த அம்புலன்ஸ் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது .

சம்பவத்தில் 55 வயதுடைய குடும்பத்தலைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் அவருடைய மனைவி படுகாயமடைந்த நிலையில் வைத்திசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளள்ளார் , சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.