அஞ்சலிக்காக ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல்!

0 4
0 4

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைர்சருமான மறைந்த ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தற்போது கொழும்பு, பத்தரமுல்லையிலுள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அமைச்சர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் மதத் தலைவர்கள், தொழிற்சங்க வாதிகள், பொது மக்கள் என பலரும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அன்னாரின் பூதவுடல் நாளை பாராளுமன்றக் கட்டடத் தொகுதியிலும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமியபவனிலும் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.