நாடு திரும்பும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

90
90

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வரும் அனைத்து பயணிகளுக்கு விமான நிலைய வளாகத்துக்குள்ளேயே பீ.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்கும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சமீபத்தில் விமான நிலையத்தில் பீ.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு தேவையான உபகரணங்களை வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அறிவுறுத்தியிருந்தார்.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுடன், கட்டுநாயக்க விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட கண்காணிப்பு நடவடிக்கையின் போது, இந்த அறிவுறுத்தலை அவர் வழங்கியிருந்தார்.