பாரவூர்தி விபத்து; சாரதி பலி

Re size 035
Re size 035

திருகோணமலை – ஹொரவபொத்தானை பிரதான வீதி, வில்கம் விகாரை பகுதியில் இன்று (03) அதிகாலை பாரவூர்தி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் பாரவூர்தியின் சாரதி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பாரவூர்தி, அநுராதபுரத்திலிருந்து திருகோணமலை நோக்கி சீமெந்து ஏற்றுவதற்காக பயணித்துக்கொண்டிருந்த போது, வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர், 33 வயதான கண்டி-கலகெதர பகுதியைச் சேர்ந்த சன்ஜய சந்துன் விக்ரமசிங்க என பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் உப்புவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.