உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட 30 பேர் வைத்தியசாலையில்!!

0 3
0 3

ஆரையம்பதி கோயில்குளம் பகுதியில் திருமண வீடு ஒன்றில் நேற்று முன்தினம் இரவு சுமார் 200 பேர் வரை கோழி இறைச்சி பிரியாணியை உணவாக உட்கொண்டுள்ளனர் . பரிமாறப்பட்ட உணவு ஒவ்வாமையால் 30 பேர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது

இதனையடுத்து இவர்களில் அதிகமானோர் மயக்கம், வாந்தி, காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டு ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்கான மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களுள் பெண்கள் சிறுவர்களும் அடங்குகின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக சுகாராதார பகுதியினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, இன்று காலையும் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் தொடர்ந்தும் வந்து கொண்டிருப்பாகவும் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.