பரீட்சைகள் ஒத்திவைக்கப்படும் சாத்தியமில்லை!!

3 b
3 b

இலங்கையில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை ஆகியன ஒத்திவைக்கப்படும் சாத்தியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே திட்டமிட்டவாறு குறித்த இரு பரீட்சைகளும் நடத்தப்படக்கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும், பரீட்சைகளை ஒத்திவைக்கவேண்டிய தேவை ஏற்பட்டால் அது குறித்து கலந்துரையாடி தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.

இதேவேளை, இந்த ஆண்டு இடம்பெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகளில் கணிப்பான்களைப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.