கொரோனா ஆபத்து :சாரதி, நடத்துனர் கைது செய்யப்படுவர்!

60 o 1
60 o 1

பஸ் பயணங்களில் சமூக இடைவெளி உட்பட சுகாதார நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவிக்கின்றார்.

அவ்வாறு சமூக இடைவெளி உட்பட சட்டங்களை பயணிகள் மீறினால் , சாரதியும், நடத்துநருமே கைது செய்யப்படுவார்கள் என அவர் எச்சரித்தார்.

பொது பிரயாணங்களின்போது கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து உள்ளது. இந்நிலையிலும் பஸ் பயணங்கள் குறித்து, பல முறைப்பாடுகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.