திடீரென மயங்கி விழுந்தவர் உயிரிழந்தார்!!

download 4 1
download 4 1

யாழில் சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாவற்குழி ரயில் நிலையத்தருகில் சற்று முன் வேலை செய்து கொண்டிருந்த நபர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் புகையிரத திணைக்களத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் , புகையிரத ஓடு பாதை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டு வந்த இளைஞரே மயக்கமுற்று வீழ்ந்த நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.