அயலவர்களுக்கு இடையில் இடம்பெற்ற கைகலப்பில் தீக்கிரையான பெண்!

9 ad 1
9 ad 1

வவுனியா றம்பைவெட்டி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தீக்காயங்களுக்குள்ளாகிய நிலையில் நேற்றுக் காலை வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணுக்கும், அயலவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கைகலப்பிலேயே இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த விடயம் தொடர்பாக வவுனியா வைத்தியசாலை பொலிசாரின் தகவலுக்கமைய மாமடு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதன் நிமித்தம் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் அதேபகுதியை சேர்ந்தபெண் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாக மாமடு பொலிசார் தெரிவித்தனர்.