30 வருடமாக தமிழ் மக்களினது வாழ்க்கை மீண்டும் கட்டியொழுப்பவில்லை- சுமணரட்ன தேரர்!

IMG 3725 scaled
IMG 3725 scaled

நாடாளுமன்றத்தில் (30) வருட காலமாக எமது அரசியல் வாதிகள் தூங்கி விழுந்தார்களளே தவிர (30) வருட யுத்ததிற்கு முகம் கொடுத்து பாதிக்கப்பட்ட மக்களினது வாழ்க்கையை மீண்டும் கட்டியொழுப்பு வதற்குரிய அரசியல் வாதியை இதுவரை காணமுடியவில்லை. என மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம விகாரை விகாராதிபதி சுமணரட்ன தேரர் தெரிவித்தார்.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் சுமணரட்ன தேரர் களமிறங்கியுள்ளது தொடர்பாக அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று புதன்கிழமை (10) விகாரையில் இடம்பெற்றபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழுகின்ற பௌத்த மதகுரு என்ற வகையில் மட்டக்களப்பு மாவட்டம் மட்டுமல்ல கிழக்கு மாகாணத்தில் வாழுகின்ற மக்கள் தொடர்பாக கூடிய கவனமும் அக்கறையுடன் செயலாற்றி வந்த மதகுரு நான் கிழக்கு வாழ் மக்கள் அறிந்த விடயம் அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் (22) சுயேச்சைக்குழு மேளச்சின்னத்தில் (1) இலக்கத்தில் போட்டியிடுகின்றேன்.

யுத்தகாலத்தில் நான் மட்டக்களப்பு மாவட்டத்தில் மூலை முடுக்கிலுள்ள கிராமம் கிராமமாக சென்று அனைத்து தமிழ் மக்களுடைய பல்வேறுபட்ட பிரைச்சனைகளுக்கு முன் நின்ற மதகுரு என்ற அடிப்படையில் அந்த காலத்திலிருந்து இதுவரை சில விடயங்களை கவனித்து வந்தேன்.

இந்த தமிழ் மக்களை அதிலிருந்து விடுவிப்பது யார்? தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகளுக்கு முன் நிற்ககூடிய சரியான தலைமைத்துவத்தை இது வரை எடுத்திருப்பவர் யார்?

இம் மக்கள் (30) வருடகாலமாக முகம் கொடுத்து வேதனைப்பட்ட மக்களாக இருந்த போதும் அவர்களது வாழ்க்கை மீண்டும் கட்டியொழுப்புவதற்குரிய அரசியல் வாதியை காணமுடியவில்லை என மிக கவலையடைந்தேன்.

இருந்தபோதும் அரசியலை விரும்பாத ஒருவனான நான் இருந்தபோதும் அரசியலில் ஈடுபட முன் நிற்கவில்லை ஆனால் இந்த மக்களுக்கு சரியான பதிலை வழங்க எந்த அரசியல் தலைவர்களும் இல்லாத காரணத்தால் (2020) நாடாளுமன்ற தேர்தலுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் மதகுரு என்ற ரீதியில் நான் ஒரு குழுவினை அமைத்து சுயாதீன குழுவாக எனது பெயரை முன்வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டேன்.

கடைசி (3) நிமிடம் இருக்கும் போது தான் நான் சுயேச்சை குழுவாக வேட்புமனுத் தாக்குதலை செய்தேன். தற்போது (22) சுயேச்சைக்குழு மேளச்சின்னத்தில் (1) இலக்கம் தரப்பட்டுள்ளது.

எமது நாடு மட்டுமல்ல உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் கடினமான சூழ்நிலையில் மக்கள் இருந்த வேளையில் அரசியல் தலைவர்கள் ,அதிகாரமுடையவர்கள் மூலம் மக்களுக்கு என்ன செய்தார்கள்? கவலையாக இருக்கின்றது. எமக்கு அரசியல் அதிகாரம் இருந்தால் முன்சென்று பிரதேச செயலகம், பிரதேச சபை, மற்றும் அரச ஸ்தாபனங்களின் நிர்வாக துறையினூடாக உரிய முறையில் அம் மக்கள் வாழ்வதற்கான முறைகளை ஏற்படுத்தியிருக்க முடியம்.

ஆனால் எங்களுக்கு அதிகாரம் இல்லை என்பதால் கைகட்டி பார்த்துக் கொண்டிருக்கவேண்டி ஏற்பட்டது.

எனவே எனது வாழ்நாள் காலத்தில் மக்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என இம்முறை இந்த தேர்தலில் களமிறங்கியுள்ளேன்.

எனவே அனைத்து மதத்தலைவர்களிடம் வேண்டுவது மதகுருமார்களின் தலைமைத்துவத்தில் எம்மால் செயற்படக் கூடிய பலத்தின் அடிப்படைடயில் எமது நாட்டின் ஆட்சியாளர்களுடன் பேசி (30) வருடத்துக்கு மேலாக அனுபவித்து வந்த கஷ்டங்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் அவர்களை மீட்டெடுத்து எதேனும் ஒரு செயற்பாட்டை செயற்படுத்தும் நோக்குடன் மதத்தலைவர்களின் பங்களிப்பை நான் எதிர் பார்க்கின்றேன்.

உங்களது பிள்ளைகளுக்காக நீங்கள் இனரீதியாக வடக்கு-கிழக்கில் பல் வேறுபட்ட பிரச்சனைகளை அனுபவித்து வந்துள்ளீர்கள் அது தொடர்பாக ஆயிரக்கனக்கான பயில் என்னிடம் இருக்கின்றது. சொத்து, காணி, வேலையில்லா, பிரதேச, எல்லைப் பிரச்சனைகள் என பல்வேறுபட்ட பிரச்சனையுள்ளது.

எனவே இவற்றுக்கு நாம் பதிலளிக்க வேண்டுமென்றால் நாம் அதற்கான இடத்தில் இருக்க வேண்டும். அதற்காக நான் முயற்சிக்கின்றேன்.

எனவே மக்கள் நான் வாழுகின்ற காலத்தினுள் மதகுரு என்ற ரீதியில் என்னால் செயற்படுத்தக் கூடிய சக்தியை எனது சேவையை பாவித்துக் கொள்ளமுடியும்.

நான் உங்களை விட உங்கள் குழந்தைகளினது வாழ்க்கையினை வென்றெடுக்க கூடிய அனைத்து நடவடிக்கையையும் எடுப்பேன்.

எனவே தேர்தலில் வாக்கை விரயம் செய்யாது நான் நாடாளுமன்றம் செல்வதற்கா வாக்களியுங்கள் என்றார்.