இலங்கையில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு மீளவும் சீருடை வழங்குவது குறித்து கலந்துரையாட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன கூறியுள்ளார்.
மேலும் பாடசாலை மாணவர்களுக்கு தற்பொழுது சீருடைக்கு பதிலாக வவுச்சர் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந் நடைமுறையானது நல்லாட்சி அரசாங்கத்தில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற மஹபொல புலமை பரிசில் நிதியுதவியை தொடர்ந்து வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.