மண்முனைப்பற்று பிரதேச செயலகம் ஏற்பாடு செய்து நடாத்திய இரத்ததான நிகழ்வானது பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
உதிரம் கொடுத்து உயிரைக் காப்போம் எனும் தொனிப்பொருளிற்கு அமைவாக இடம்பெற்ற இரத்தானத்திற்காக மட்டக்களப்பு போதான வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவின் வைத்தியர் எஸ்.விவேக் மற்றும் குழுவினர் வருகைதந்திருந்தனர்.
இதன்போது இந்நிகழ்வினை ஆரம்பித்து வைக்கும்முகமாக மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் இரத்த தானம் வழங்கி ஆரம்பித்து வைத்ததுடன், பெருமளவிலான பிரதேச செயலக உத்தியோகத்தர்களும், பிரதேச விளையாட்டு கழகம், இளைஞர் கழகங்களின் உறுப்பினர்களும் சமூக ஆர்வலர்களும் கலந்துகொண்டு உரிய பரிசோதனைகளின் பின்னர் இரத்ததானம் வழங்கினர்.