“முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தேர்தலில் போட்டியிடாது விலகினாலும் அவர் சம்பந்தமாக நடக்கும் விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெறும். அவற்றுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் நிறுத்தப்பட மாட்டாது.” என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் அனுருத்த ஜயரத்ன தெரிவித்தார்.
“முன்னாள் நிதி அமைச்சரான ரவி கருணாநாயக்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துக்கொண்டாலும் அது குறித்து ஆச்சரியப்பட தேவையில்லை” எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“குற்றவாளிகளும், மோசடியாளர்களும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து அங்கத்துவத்தைப்
பெற்றுக்கொண்டாலும் அவர்கள் செய்த தவறுகளில் இருந்து தப்பிக்க இடமளிக்கப் போவதில்லை” – என்றார்.