உயர்தர பரீட்சை; இறுதித் தீர்மானம்

11 1
11 1

க.பொ. உயர்தர மாணவர்களுக்காக பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில், குறிப்பிடப்பட்ட திகதிக்கு ஒரு வாரம் முன்னதாக பாடசாலைகளை திறப்பதற்கு கல்வியமைச்சு அவதானம் செலுத்தி வருகிறது.

உயர்தர பரீட்சைக்கு மாணவர்கள் ஆயத்தமாவதற்காக வழங்கப்பட்டுள்ள காலம் போதாமை என்ற கருத்து பல்வேறு தரப்பினரிடம் இருந்து வெளிவந்ததன் காரணமாக குறித்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், எதிர்வரும் 29ஆம் திகதி நான்கு கட்டங்களின் கீட் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், 13, 12 மற்றும் 5ஆம் தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஜூலை 6ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளதாக கல்வியமைச்சு ஏற்கனவே தெரிவித்திருந்தது.

இந்நிலையில் உயர்தர பரீட்சைகள் செப்டெம்பர் 7ஆம் திகதி ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.