மாதகலில் கஞ்சா கடத்தல் சந்தேகநபர்கள் கைது

9 ad 2
9 ad 2

யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் கஞ்சா போதைப் பொருளை கடத்தினர் எநிற சந்தேகத்தில் இருவரை இளவாலை பொலிஸாரால் கைது செய்துள்ளதுடன் அவர்களிடம் இருந்து 45 கிலோகிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் கஞ்சா போதைப்பொருள் கடத்தப்படுவதாக நேற்று கடரப்படையினரின் புலனாய்வுப் பிரிவினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து கடற்படையினர் மேற்கொண்ட விசாரணையில் மாதகல் குசுமன் துறைப் பகுதியில் வைத்து இருவரை கைது செய்ததுடன் அவர்களிடம் இருந்து 45 கிலோ கஞ்சா போதைப் பொருளும் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்