கொழும்பு தேசிய மருத்துவமனையில் ஊழலில் ஈடுப்பட்டதாக கருதப்படும் மருத்துவர் ஒருவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்த காவல் துறை அதிகாரி ஒருவர் வாகன விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார்.
நேற்றிரவு சம்புத்வ ஜயந்தி மாவத்தை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த இவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிக்ச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஆனால் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.