அரை சொகுசு பேருந்துகளுக்கான கட்டணத்தை அதிகரிப்பதற்கு அனுமதி இல்லை

4 ad 1
4 ad 1

இலங்கையில் சாதாரண பேருந்துகளில் அரை சொகுசு பேருந்துகளுக்கான கட்டணத்தை அதிகரிப்பதற்கு எந்த சந்தர்ப்பத்திலும் அனுமதி வழங்கப்படமாட்டாது என போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

பேருந்து கட்டணத்தை அதிகரிக்குமாறு பேருந்து சங்கங்கள் விடுத்த கோரிக்கை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சாதாரண கட்டண அறவீட்டுடன் முன்னெடுக்கப்படும் பேருந்து சேவைகளுக்கும், அரை சொகுசு பேருந்துகளில் அறவிடப்படும் பயணக் கட்டணத்தை அறவிடுவதற்கு வாய்ப்பு வழங்குமாறு அரசாங்கத்திடம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன மற்றும் செயலாளர் அஞ்சன ப்ரியஞ்சித் ஆகியோரினால் இந்த யோசனையை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாடுமுழுவதும், சாதாரன கட்டண அறவீட்டுடன் இயங்கும் பேருந்துகள், ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைய பயணிகளை ஏற்றிச் செல்வதனால் சிரமத்திற்கு உள்ளாவதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.