இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் (12) பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி கொரோனா தொற்றியவர்களின் மொத்த எண்ணிக்கை (1,901) ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, மேலும் (55) பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர். அதற்கமைய தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை (1,342) ஆக உயர்வடைந்துள்ளது.
கொரோனாத் தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் தற்போது (547) நோயாளிகள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் (11) பேர் சிகிச்சைகளின் போது உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் (46) பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.