நான்கு மீனவர்களுடன் காணாமல் போன இந்திய படகு ;கடற்படையிடம் முறைப்பாடு

03 2
03 2

இந்தியாவின் தமிழகத்தில் இருந்து நேற்று முன்தினம் கடற்றொழிலிற்காக புறப்பட்ட ஓர் படகு கரை திரும்பாத நிலையில் இலங்கை கடற்படையினரின் உதவி நாடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் ராமேஸ்வரம் பகுதியில் இருந்து 718 இலக்கமுடைய றோளர் படகு புறப்பட்ட நிலையில் அக்காமடம் என்ற இடத்தை சேர்ந்த மலரவன், ஆனந் ,பாஸ்கர் ஆகியோரும் கீழ்க்காடு என்ற இடத்தை சேர்ந்த , ஜேசு , ஆகிய நான்கு மீனவர்களும் குறித்த படகில் பயணித்துள்ளனர்.

இவ்வாறு பயணித்த படகும் அதில் இருந்த 4 மீனவர்கள் தொடர்பில் எந்த தவலும் இல்லாத நிலையிலேயே மேற்படி படகு இலங்கை கரையை அடைந்துள்ளதா என இலங்கை கடற்படையினரிடம் கோரப்பட்டுள்ளது.

இதேநேரம் இவ்வாறு காணமல்போன படகினைத் தேடி இந்திய விமானப்படைக்குச் சொந்தமான உல ங்குவானூர்தி ஒன்று கச்சதீவை அண்டிய பகுதிவரை தேடுதல் மேற்கொண்டு பறப்பில் ஈடுபட்டுள்ளது.