தபால்மூல வாக்களிப்பிற்கான தினம் அறிவிப்பு..!

1 asdf
1 asdf

எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு திகதி குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் ஜூலை மாதம் 14,15,16 மற்றும் 17ஆம் திகதிகளில் இடம்பெறும் என்பதோடு அன்றைய தினம் வாக்களிக்க முடியாதவர்களுக்கு மேலதிக தினமாக ஜூலை 20 மற்றும் 21ஆம் திகதிகளிலும் வாக்களிக்க முடியுமென தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் ஜூலை 11,12 மற்றும் 13ஆம் திகதிகளில் அஞ்சலுக்கு கையளிக்கப்படுமெனவும் தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, எட்டாவது நாடாளுமன்றத்திற்கான பொதுத்தேர்தல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.