நாட்டில் போதைப் போருட்களை அடியோடு ஒழிக்கும் முயற்சியில்
காவல்துறை!
நாட்டின் மேல் மாகாணத்தில் நேற்றைய (16) தினம் மாலை (6) மணி தொடக்கம் இன்றைய (17) தினம் அதிகாலை 5 மணி வரை (404) பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுள் ஹெரோயின் போதை பொருளுடன்(170) பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதன்போது 143 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் கஞ்சா போதை பொருளை வைத்திருந்த (77) பேரும் மற்றும்
ஐஸ் ரக போதை பொருளை கைவசம் வைத்திருந்த (14) பேரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என காவல்துறைமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.