இலங்கை சிறப்பாக கொரோனாவை கட்டுப்படுத்தியமைக்கு சீன ஜனாதிபதி ஸீ ஜிங் பின்ங் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான சீனா தூதுவருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றுள்ளது.
நாளைய தினம் கொண்டாடப்படவுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் பிறந்த தினத்தை முன்னிட்டு சீன ஜனாதிபதி ஸீ ஜிங் பின்ங் அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு சீன அரசாங்கம் மருத்துவ உதவிகளை அனுப்பியதையும் சீன ஜனாதிபதி நினைவுபடுத்தியுள்ளார்.
இந்த நிலையில், இவ்வாறான துரதிஷ்டவசமான நிலையில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கியமைக்கு சீன அரசாங்கத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நன்றி தெரிவித்துள்ளார்.