புகையிரதத்தின் முன் பாய்ந்து குடும்பஸ்தர் தற்கொலை

dead body

வவுனியா பெரியகட்டு 41 ஆவது மைல் கல்லுக்கு அண்மையில் புகையிரதத்திற்கு முன்பாக பாய்ந்து குடும்பஸ்தரொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்றுகாலை 22.06.2020 இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மன்னார் எழுத்துரில் வசிக்கும் ஆ.ரகுசங்கர் இரண்டு பிள்ளைகளின் தந்தையே இன்று காலை தனது காரை புகையிரத பாதையின் அருகில் நிறுத்திவிட்டு மன்னார் சென்ற புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், சடலம் மடு புகையிரத நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.