எலிக்காய்ச்சலால் 12பேர் உயிரிழப்பு! சுகாதார அமைச்சு தெரிவிப்பு

Rat Fever
Rat Fever

நாட்டில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் எலிக்காய்ச்சலால் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இதுவரையான காலப்பகுதிக்குள் சுமார் 2,800 பேர் எலிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, காலி, ஹம்பாந்தோட்டை, மாத்தறை, அநுராதபுரம், இரத்தினபுரி, கொழும்பு, களுத்துறை,பொலன்னறுவை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களிலேயே எலிக்காய்ச்சலால் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.