வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பத்திற்கான புதிய வீடு!

IMG 2219
IMG 2219

போரால் பாதிக்கப்பட்ட வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பத்திற்கான புதிய வீடு நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் புங்குடுதீவு வட்டாரம் ஜே (27) கிராம சேவையாளர் பிரிவில் தியாகி அறக்கொடை நிறுவனத்தின் நிதி ஒதுக்கீட்டில், யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி ருவான் வணிகசூரிய அடிக்கல் இன்று (22) நாட்டி வைத்தார்.

யாழ் மாவட்ட பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் சமூக சேவைகளில் ஒன்றாகிய வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பத்திற்கு வீடு நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

(512) பிரிகேடியர் படைத் தலைமையகத்தின் (51) பிரிவில் இந்த வீடு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.