தொடரூந்து முன் குதித்து தற்கொலை!

download 4 2
download 4 2

நாட்டின் வவுனியா – பெரியகாடு பிரதேசத்தில் இன்று (22) காலை தொடரூந்துடன் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மன்னார் பிரதேசத்தினை சேர்ந்த (43) வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் கெப் ரக வாகனம் ஒன்றில் பயணித்து, வாகனத்தினை நிறுத்தி விட்டு மதவாச்சி தொடக்கம் மன்னார் நோக்கி பயணித்து கொண்டிருந்த தொடரூந்து முன் குதித்து தற்கொலை செய்து கொண்டார் என தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக மன்னார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பரனாயங்குளம் காவற்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.