ராஜபக்சக்களின் போலியான தேசபக்தியை கருணா அம்பலம் செய்துள்ளார்! சம்பிக்க

champikka
champikka

கருணாவின் கூற்று ராஜபக்ஷக்களின் போலியான தேசபக்தியை காட்டுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் போர்வீரர்கள் பற்றிய கதைகளைக்கூறி ராஜபக்ஷக்காள் தெற்கில் உள்ள தேர்தல் தொகுதிகளை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் சாடியுள்ளார்.

அண்மையில் கருணா அம்மாநில கருத்து தொடர்பாக கருத்தை வெளியிட்டிருக்கும் சம்பிக்க ரணவக்க, “போரில் வெற்றிகொண்ட இராணுவ வீரர்களை பற்றிய கதைகளைக்கூறி தெற்கிலுள்ள தேர்தல் தொகுதிகளை ராஜபக்ஷக்கள் ஏமாற்றிக் கொண்டிருக்கும் போது, மறுபுறம் அக்கட்சியின் வேட்பாளர் தான் எவ்வாறு 3000 இராணுவ வீரர்களைக் கொன்று குவித்தேன் என்பதைப் பெருமையுடன் கூறுகிறார்.

இதன்மூலம் ராஜபக்ஷக்களின் போலியான தேசபக்தி மீண்டுமொரு முறை வெளிப்பட்டிருக்கிறது. பொதுஜன பெரமுனவின் முன்னணி வேட்பாளராக மாறிய கருணா அம்மான் மட்டக்களப்பில் உரையாற்றுகையில், போரின் போது தான் எவ்வாறு 3000 இராணுவவீரர்களைக் கொன்றேன் என்பதைப் பெருமையுடன் கூறுகின்றார்.

அதேவேளை போர்வீரர்கள் பற்றிய கதைகளைக் கூறி ராஜபக்ஷர்கள் தெற்கில் உள்ள தேர்தல் தொகுதிகளை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

நாவிதன்வெளி பிரதேசத்தில் மக்கள் கூட்டமொன்றில் உரையாற்றிய கருணா அம்மான், “கொரோனாவின் காரணமாக 9 பேர் தான் உயிரிழந்தார்கள். எனினும் நாம் ஆணையிறவில் ஒரே இரவில் இராணுவத்தினரில் 2000 முதல் 3000 பேரைக் கொலை செய்தோம் என்றும் வெளியிட்ட கருத்து சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.