ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பிலான இறுதி அறிக்கை

select committee
select committee

ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை எதிர்வரும் 23 அல்லது 24 ஆம் திகதிகளில் பாராளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவுக்குழுவின் தலைவரான பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான மற்றுமொரு சந்திப்பு எதிர்வரும் 17ஆம் திகதி இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இறுதி அறிக்கையை தயாரிக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.