”என்னால் இப்போது வர முடியாது” சி.ஐ.டிக்கு கருணா அறிவிப்பு

Karuna Amman
Karuna Amman

2000 அல்லது 3000 இராணுவத்தினரை கொலை செய்ததாக தெரிவித்த கருத்து தொடர்பில் குற்றப்புலான்ய்வுத் திணைக்களத்திற்கு விசாரணைக்காக கருணா அழைக்கப்பட்டார்.

எனினும் தனக்கு தற்போது வர முடியாது என கருணா அறிவித்தல் விடுத்துள்ளார். தனது சட்டத்தரணி ஊடாக இந்த அறிவித்தலை அவர் விடுத்துள்ளார்.

தனக்கு உடல்நிலை சரியாக இல்லாததன் காரணத்தால் தமக்கு வர முடியாது என அறிவித்துள்ளர்.

மேலும் தனது உடல்நிலை சரியானதும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் ஒன்றை பெற்றுத்தருவதாகவும் அவர் தனது வழங்கறிஞர்கள் மூலம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.