அரசியலமைப்பு பேரவை இன்று (24) கூடவுள்ளது. முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் அரசியலமைப்பு பேரவை கூடவுள்ளதாக பாராளுமன்றத்தின் தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர் சான் விஜயதுங்க குறிப்பிட்டுள்ளார்.
சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று மாலை 6 மணிக்கு அரசியலமைப்பு பேரவை கூடவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையில் காணப்படும் உறுப்பினர்களுக்கான வெற்றிடத்திற்கு ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.