மணல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று உழவு இயந்திரம் ஐந்து சந்தேக நபர்கள் கைது

01 6 1

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்குறாணை மாதுறுஓயா ஆற்றில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று உழவு இயந்திரம் மற்றும் ஐந்து சந்தேக நபர்கள் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை விசேட அதிரடிப்படைப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து விசேட அதிரடிப் படையின் பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள அக்குறாணை மாதுறுஓயா ஆற்றில் மணல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று உழவு இயந்திரம் மற்றும் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.

01 1 1

வாழைச்சேனை விசேட அதிரடிப்படைப் படையினரால் கைப்பற்றப்பட்ட மணல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று உழவு இயந்திரம் மற்றும் ஐந்து சந்தேக நபர்கள் வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

01 2 2

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பல்வேறுபட்ட சட்டவிரோத செயல்கள் நடைபெற்று வருவதாகவும், இதனை தடுக்கும் வகையிலும், குற்றவாளிகளை கைது செய்யும் வகையிலும் பொலிஸார், விசேட அதிரடிப்படைப் படையினர் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினர் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.