ரிஸ்வானின் குடும்பத்தினருக்கு மத்திய மாகாண ஆளுநர் உதவி!

ri
ri

மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் கடந்த மே மாதம் 21ஆம் திகதி பாய்ந்து தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த பெண்ணை நீர்த்தேக்கத்திலிருந்து உயிருடன் காப்பாற்றி தனதுயிரைவிட்ட லிந்துலை, ரந்தனிகலவைச் சேர்ந்த ரிஸ்வானின் குடும்பத்தினருக்கு மத்திய மாகாண ஆளுநர் லலித்யூகமவினால் வீடொன்றைக் கட்டிக்கொள்வதற்கு ஒரு தொகை நிதி உதவி வழங்கிவைக்கப்பட்டது.

அத்துடன், குறித்த பெண்ணைக் காப்பாற்ற உதவிய தலவாக்கலைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் பிரதான பொலிஸ் பரிசோதகர் ருவன் பெர்னாண்டோ மற்றும் நிலையத்தின் பொலிஸ் கான்ஸ்டபிள் செல்வராஜ் கந்தரூபன் ஆகிய இருவருக்கும் நினைவுப் பரிசில்களும் ஆளுநரினால் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில்நுவரெலியா மாவட்டத்துக்குப் பொறுப்பான உதவிப் பொலிஸ் மா அதிபர் சஞ்ஜீீவ தர்மரத்ன, மத்திய மாகாண செயலாளர் காமினி ராஜரட்னம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.