யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நவீன சி.ரி.ஸ்கானர் சேவையை இன்று சனிக்கிழமை இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பொ.றஞ்சன், எஸ்.கதிர்காமநாதன், பி.நந்தபாலன் மற்றும் சமூக ஆர்வலர்களின் நிதிப் பங்களிப்பு மூலம் வழங்கப்பட்ட நவீன சி.ரி.ஸ்கானர் சேவை ஆரம்பித்துவைக்கப்பட்டது. பேதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தலைமையில் காலை 8.30 இற்கு இந் நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர் கட்சித் தலைவர் சி.தவராசா, வைத்தியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.