கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 40 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து இன்று (வியாழக்கிழமை) வெளியேறியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய இந்த கொடிய நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 602 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 21 கடற்படையினரும் உள்ளடங்குவதாக கடற்படை தெரிவித்துள்ளது. இதனையடுத்து, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த கடற்படையினரின் மொத்த எண்ணிக்கை 811 ஆக அதிகரித்துள்ளது.
இதேநேரம் இலங்கையில் இதுவரையில் 2001 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 1602 பேர் குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 388 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மேலும் நாட்டில் இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளான 11 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.