காவல் துறை அதிகாரி ஒருவர் கைது

ARREST sattamani 2

அநுராதபுரம் காவல்துறை நிலையத்தில் பணியாற்றிய காண்ஸ்டபிள் ஒருவர் 10 கிலோ கஞ்சாவுடன் அநுராதபுரம் – சிராவஸ்திபுர பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சந்தேகநபர் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டார் என அநுராதபுரம் பிரதிக் காவல்துறைமா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தமது கடமை நேரத்தில் கஞ்சாவை கொண்டு சென்றதாக கைதுசெய்யப்பட்ட காவல்துறை காண்ஸ்டபிள், கற்குளம் பகுதியை சேர்ந்த 46 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்டவர், அநுராதபுரம் சிரேஷ்ட காவல்துறை அதிகாரியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பிரதான வாயில் காவலராக கடமையாற்றுபவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.