நிவாரணங்கள் பாதீட்டில் வழங்கவுள்ளதாக பிரதமர்!

DubNOvYXcAEPedc 1
DubNOvYXcAEPedc 1

நாட்டின் தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் உள்நாட்டு திரைப்பட தொழிற்துறையை கட்டியெழுப்புவதற்காக இயன்றளவு நிவாரணங்கள் பாதீட்டில் வழங்கவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

திரைப்படைத்துறையில் ஈடுபடுபவர்கள், திரையரங்கு உரிமையாளர்களுடன் அலரிமாளிகையில் நேற்று நடாத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக சுமார் (100) நாட்களுக்கு மேலாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன.

இதன் காரணமாக திரையரங்குகளை மீள இயங்க செய்வதற்கு பாரிய அளவிலான செலவுகள் ஏற்படக் கூடும் என திரையரங்குதறையினர் பிரதமரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் திரைப்படங்கள் தயாரிக்கப்படாததன் காரணமாக தங்களது தொழிற்துறை பெரியளவில் பாதிக்கப்பட்டதாக திரைப்படத்துறையினர் தெரிவித்துள்ளனர்.