ஹம்பாந்தோட்டை பொது மருத்துவமனையினுள் ஸ்தாபிக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த அனைவரும் தற்போதைய நிலையில் வைத்தியசாலையில் இருந்து வௌியேறியுள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து கடந்த மே மாதம் 28 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கொரோனா சிகிச்சைப் பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டது.
குவைட்டில் இருந்து வந்து திருகோணமலை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 108 பெண்கள் உள்ளிட்ட தரப்பினருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் குறித்த பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அவ்வாறு சிகிச்சை பெற்று வந்த நோயாளர்கள் கட்டம் கட்டமாக வைத்தியாலையில் இருந்து வௌியேறிய நிலையில் இன்றைய தினம் (01) எஞ்சிய 67 பேரும் வைத்தியசாலையில் இருந்து வௌியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.