கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்

7471f664bbb82328f1e3a09753bd4122

நாட்டில் நேற்றைய தினம் ஆறு  பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பங்களாதேஷிலிருந்து நாடு திரும்பிய நான்கு பேருக்கும், ஐக்கிய இராச்சியம் மற்றும் டுபாயிலிருந்து நாடுதிரும்பிய இருவருக்கும், கொவிட்-19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 54 ஆக அதிகரித்துள்ளது.

கொவிட்-19 ஆல் பீடிக்கப்பட்டிருந்தவர்களில் மேலும் 37 பேர் நேற்று பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 748 ஆக அதிகரித்துள்ளது.

சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 294 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த பகல்நேர குழந்தை பராமரிப்பு நிலையங்களை இன்று முதல் மீண்டும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பெற்றோர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற கோரிக்கைகளுக்கு அமைய, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.