24 மணி நேரத்தில் 1700 க்கும் மேற்பட்டோர் கைது

jail arrested arrest prison crime police lock up police station shut 740x414 1

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளின் போது 1700 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த 1 ஆம் திகதி நள்ளிரவு முதல் நேற்று (02) நள்ளிரவு வரை பொலிஸ் நிலையங்கள் ஊடாக நடத்தப்பட்ட சோதனைகளின் போது போதை பொருள், ஆயுதம் மற்றும் சட்டவிரோதமான மதுபான விற்பனை தொடர்பில் 789 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த 24 மணி நேரத்தில் பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்ட 306 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, மேலும் பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 638 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.