மேற்கு, வடமேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களில் மழை பெய்யுக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதே வேளை, உவா, கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டின் சில பாகங்களில், சில நேரங்களில் காற்றின் வேகம் மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் அதிகரிக்கக்கூடும், குறிப்பாக மத்திய மலைபிரதேசங்கள் மற்றும் வடக்கு, வட-மத்திய, வடமேற்கு மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் மேற்கு பகுதிகளில் இதனை அவதானிக்க முடியும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும்போது மின்னல் தாக்கம் மற்றும் பலத்த காற்று காரணமாக ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.