2 கடற்படை வீரர்கள் பூரண குணமடைந்தனர்

1593574019 NAVY 2

கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 2 கடற்படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் குறித்த வைரஸ் அவர்களின் உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் வைத்தியசாலைகளில் இருந்து அவர்கள் வெளியேறியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

இதன்படி குறித்த வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுகொண்டிருந்த போது, அவர்கள் மீது நடத்தப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் அவர்களின் உடலில் குறித்த வைரஸ் இல்லை என்பது தெரியவந்ததுடன் அவர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இவ்வாறு வௌியேறிய இருவருடன் இதுவரை 879 கடற்படை வீரர்கள் முழுமையாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

வெளியேறிய கடற்படை வீர்ர்கள் சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றி மேலும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.