பயணியுடன் விருந்தினர் ஐவரை அழைத்துச் செல்வதற்கு அனுமதி!

tr
tr

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகள் வெளியேறும் முனையத்திலுள்ள விருந்தினர்களுக்கான பகுதிக்குள், விருந்தினர்கள் ஐவரை அழைத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இன்று (06) முதல் இந்த அனுமதி வழங்கப்படுகின்றது என விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

பயணிகள் மற்றும் விருந்தினர்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பேணுதல் உள்ளிட்ட சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி நடந்துகொள்வது கட்டாயம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவலையடுத்து, கடந்த ஜனவரி மாதம் (28)ஆம் திகதி முதல் பயணிகள் மற்றும் ஊழியர்களைத் தவிர விமான நிலையத்துக்குள் விருந்தினர்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் (15) ஆம் திகதி முதல் பயணிகளுடன் (03) பேர் செல்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஐவருக்கு அவ்வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.