கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்குள்ளான மேலும் 3 கடற்படையினர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, 888 கடற்படையினர் இதுவரையில் பூரணமாக குணமடைந்துள்ளதாக கடற்படை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2077 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 1917 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர்.