மேலும் 38 பேர் பூரண குணம்

5

கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 38 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை 1955 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

எனினும் நாட்டில் இதுவரை கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2078 ஆக அதிகரித்துள்ளது.